நுவரெலியாவில் முகநூல் களியாட்டம் ; சோதனையிட்ட பொலிஸாருக்கு க்ஷாக்; 18 பேர் கைது
விடுமுறைக்காக நுவரெலியாவிற்கு வந்த 18 பேர் சந்தேகத்தின் பேரில் இன்று (18) கைதுசெய்யப்பட்டதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் தலைமை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பொலிஸ் தலைமையக தலைமை ஆய்வாளர் சம்பவம் தொடர்பில் மேலும் கூறுகையில்,
18-28 வயதுக்குட்பட்டவர்கள்
இன்று (18) நுவரெலியாவில் நடைபெறவிருந்த விருந்துக்கு பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட ஒரு குழு கைதுசெய்யப்பட்டவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தெமட்டகொட, கம்பஹா, கொழும்பு உள்ளிட்ட இலங்கையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், 18-28 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் , அவர்களிடம் குஷ், ஹெராயின், ஐஸ், போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் வைத்திருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டன.
நுவரெலியா பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் உதவியுடன், நுவரெலியாவிற்கு உள் நுளையும் அனைத்து பிரதான வீதிகளை உள்ளடக்கிய பொலிஸ் சோதனை பாதைத் தடைகளைப் பயன்படுத்தி சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அதேவேளை தீபாவளி பண்டிகை காலம் காரணமாக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவிற்கு வந்துள்ளதாக நுவரெலியா சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.