ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
டிட்வா சூறாவளியின் பின்னர் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த 28 ஆம் திகதி அமுலாகும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அவசரகால நிலை நீடிக்கப்பட்டு, புதிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொது அவசரநிலை
பொது அவசரநிலை காரணமாக, பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றின் நலன்களுக்காக, அவசரகால நிலையை நீடிப்பது பொருத்தமானது எனத் தாம் கருதுவதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய, அவசரகால நிலை நீடிக்கப்பட்டுள்ளது.