யாழில் உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் மீட்பு
யாழ் கொடிகாமம் – வரணி , குடமியன் பகுதியிலுள்ள காட்டு பகுதியில் இருந்து, அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கிளைமோர், கப்டன் பவான் (ஐயா) – 99 எனும் வாகன தகர்ப்பு வெடிகுண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு நேற்று முதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள் அதிசக்தி வாய்ந்தவை எனவும் சில நாள்களுக்கு முன்னர் இவை, காட்டுப்பகுதிக்குள் கொண்டு வந்து மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.