விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி இன்று (14) அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.மஹ்ரூஸ் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், புதுக்குடியிருப்பு பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.

பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் நிலத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. அதேளை தற்போது அகழ்வு இடம்பெறும் பகுதியில் 2021ம் ஆண்டு அகழ்வு இடம்பெற்று எதுவும் கிடைக்காத நிலையில் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

