உகண்டாவிலிருந்து இலங்கை வந்த பெண்ணை பரிசோதித்ததில் காத்திருந்த அதிர்ச்சி
உகண்டாவிலிருந்து இலங்கை வருகை தந்த பெண் ஒருவர் தனது வயிற்றில் கொக்கைன் வில்லைகள் வைத்திருந்தமை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவு அதிகாரிகளால் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார்.
உகண்டாவிலிருந்து கட்டுநாயக்கவை வந்தடைந்த விமானத்தில் வருகை தந்த குறித்த பெண் ஒருவர் கொக்கைன் வில்லைகளை விழுங்கியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண் மீது சந்தேகித்த பொலிஸார் ஸ்கேன் செய்து பார்த்தபோது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தனது வயிற்றில் 100 கொக்கைன் வில்லைகள் இருப்பதாகவும், நேற்றிரவு 51 கோகைன் அடங்கிய வில்லைகளை வெளியில் எடுத்திருந்தாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளை தற்போது சுங்க போதைப் பொருள் கட்டுப்பட்டு பிரிவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.