பிரதமர் ஹரிணிக்காக பரிந்து பேசும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் எனத் தாம் கூறமாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பதவி விலகல் குறித்து அழைப்பு விடுப்பது தமது நிலைப்பாடு அல்ல எனவும் அவர் கூறினார்.

இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, அரசின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் நிலை குறித்து பொறுப்புடன் அணுக வேண்டும் எனவும், ஜனநாயக முறையில் தீர்வுகள் தேடப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தரம் 6 மாணவர்களுக்குரிய ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கல்வி அமைச்சுப் பதவியை வகிக்கும் பிரதமர் பதவி விலக வேண்டும் எனப் பல தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், எதிர்கட்சியின் பிரதமர் ஹரிணிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் கொண்டுவந்துள்ளது.