இராணுவ சேவையிலிருந்து சென்ற10,000 பேர் பொலிஸ் சேவைக்கு
சட்டப்பூர்வமாக இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற 45 வயதுக்குட்பட்ட 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
தம்புத்தேகம பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சரவைப் பத்திரம்
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த பணியாளர்களை 05 வருட காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் திங்கட்கிழமை (09) அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.
இதேவேளை, தற்போது சுமார் 7,880 சிறுவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் அபாயத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த புதிய வேலைவாய்ப்பு திட்டம், பொதுமக்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் குற்றம் தடுப்பு பணிகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.