பொலிஸ் அதிகாரி போல் நடித்து பல பெண்களிடம் கைவரிசையை காட்டிய முன்னாள் இராணுவ வீரர்!

Sri Lanka Army Sri Lanka Police Sri Lanka Gossip Today
By Shankar Jul 29, 2024 05:56 PM GMT
Shankar

Shankar

Report

இலங்கையில் பொலிஸ் உத்தியோகத்தர் போல் நடகமாடி பெண்களை அச்சுறுத்தி தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து, தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் இராணுவ சிப்பாய் மற்றும் அதற்கு உதவி செய்த ஒருவரை கெஸ்பேவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரி போல் நடித்து பல பெண்களிடம் கைவரிசையை காட்டிய முன்னாள் இராணுவ வீரர்! | Ex Army Man Act To Police Officer Abuse Many Women

மேலும் விசாரணையில் குறித்த சந்தேக நபர் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி போலி பொலிஸ் அடையாள அட்டையையும் தயாரித்துள்ளது தெரியவந்துள்ளது.

பாணந்துறை பகுதியில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலைய பெண் ஊழியர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி தனது காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது முச்சக்கரவண்டியில் வந்த நபர் ஒருவர் அந்த முச்சக்கரவண்டியில் வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார்.

பொலிஸ் அதிகாரி போல் நடித்து பல பெண்களிடம் கைவரிசையை காட்டிய முன்னாள் இராணுவ வீரர்! | Ex Army Man Act To Police Officer Abuse Many Women

இதன்படி முச்சக்கரவண்டியில் ஏறி சிறிது தூரம் சென்ற போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் பொலிஸ் அடையாள அட்டையை காட்டியுள்ளார்.

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர், குறித்த பெண்ணிடம் தாம் விபச்சாரத்தில் ஈடுபடுவது தொடர்பில் அனைத்துத் தகவலையும் கண்டுபிடித்துவிட்டதாக கூறி மிரட்டியுள்ளார்.

பின்னர், அவளை பல்பொருள் அங்காடிக்கு அருகில் அழைத்துச் சென்று, அவள் அணிந்திருந்த நகை, இரண்டு பென்டன்ட்கள் மற்றும் வளையல்களை வலுக்கட்டாயமாக கழற்றிவிட்டு, அவளது ஏடிஎம் கார்டிலிருந்து 150,000 ரூபாவை எடுத்துக்கொண்டு பிலியந்தலை மொரட்டுவ வீதியிலுள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அதிகாரி போல் நடித்து பல பெண்களிடம் கைவரிசையை காட்டிய முன்னாள் இராணுவ வீரர்! | Ex Army Man Act To Police Officer Abuse Many Women

குறித்த பெண்ணை விடுதிக்கு அழைத்துச் செல்வது சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் பிலியந்தலை நகருக்கு அழைத்து வந்து வேறு முச்சக்கரவண்டியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை எதிர்கொண்ட ஆடைத் தொழிலாளியான பெண் கடந்த 15ஆம் திகதி கெஸ்பேவ பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், சந்தேகநபர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாண புகைப்படங்களை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் வழங்கிய முச்சக்கர வண்டியின் பதிவு இலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், முச்சக்கரவண்டியின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் ஹொரணை பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

பொலிஸ் அதிகாரி போல் நடித்து பல பெண்களிடம் கைவரிசையை காட்டிய முன்னாள் இராணுவ வீரர்! | Ex Army Man Act To Police Officer Abuse Many Women

விசாரணைகளுக்கு அமைய, படுவந்தர, லுல்வல பிரதேசத்தில் வைத்து சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை பொலிஸாரால் கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 57 வயதான முன்னாள் இராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து போலி பொலிஸ் அடையாள அட்டை, ஐஸ் போதைப்பொருள், நடிகை உட்பட 5 பெண்களின் தேசிய அடையாள அட்டை, ஆண் ஒருவரின் தேசிய அடையாள அட்டை, 18 சிம் அட்டைகள், 5 ஸ்மார்ட் கைப்பேசிகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் அதிகாரி போல் நடித்து பல பெண்களிடம் கைவரிசையை காட்டிய முன்னாள் இராணுவ வீரர்! | Ex Army Man Act To Police Officer Abuse Many Women

மேலும், சந்தேகநபருக்கு உதவி புரிந்த முச்சக்கரவண்டி சாரதியும் முச்சக்கரவண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு ஆண்டிற்கு முன்னர் தனது கடமை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் நிலைய பொறுப்பதிகாரி பிரியங்க சில்வாவின் புகைப்படத்தை சந்தேக நபர் போலி பொலிஸ் அடையாள அட்டைக்காக பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதில் பொலிஸ் பரிசோதகர் அஜித் டி சில்வா என குறிப்பிடப்பட்டுள்ளது.

 சந்தேகநபரின் கைப்பேசியை பரிசோதித்த போது, ​​ஆடைத் தொழிலாளி மற்றும் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட காணொளி காட்சிகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் போல் நடித்து பெண்களை ஏமாற்றி மிரட்டி தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது.

தாம் கொள்ளையடிக்கும் பணத்தை நடிகைகள் மற்றும் அழகான பெண்களை வைத்துச் செலவு செய்வதாகவும், அவர்களுடனான தனது உடலுறவை கையடக்கத் தொலைபேசியில் படம்பிடிப்பதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் கெஸ்பேவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரது மோசடிகளில் சிக்கியவர்கள் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US