அற்புதமான மருத்துவ மருத்துவ குணங்கள் கொண்ட எப்சம் உப்பு! எவ்வளவு பயன்கள் தெரியுமா?
ஒரு மூலப்பொருள் பரவலாக சமீபகாலமாக எல்லா இடத்திலும் அறியப்பட்டு வருவது என்றால் அது எப்சம் உப்புதான் இதில் பல்வேறு அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதனால் கிடைக்கும் நன்மைகளும் ஏராளம்.
எப்சம் உப்பு நாம் உணவில் பயன்படுத்தும் சாதாரண சோடியம் குளோரைடு அல்ல. இது மக்னீசியம், சல்பேட் போன்றவற்றின் கலவை. இதன் வேதியியல் அமைப்பின் காரணமாகவே `உப்பு’ எனப்படுகிறது. மளிகைக்கடைகளில் கிடைக்காது. மருந்துக் கடைகளில்தான் கிடைக்கும்.
இங்கிலாந்தில் உள்ள எப்சம் என்ற ஊரில் கண்டறியப்பட்டதால், `எப்சம் உப்பு’ என்று அழைக்கப்படுகிறது. கணுக்கால் வலி முதல் மனஅழுத்தம் வரை பல பிரச்னைகளுக்குத் தீர்வு தருவது இந்த உப்பு.
வலிக்கு சிறந்த நிவாரணி:
வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எப்சம் உப்பைக் கலந்து முழங்கால் வரை நீர் படும்படி முக்கி வைக்கவேண்டும். இதனால் கணுக்கால் வலி குறையும். தலைவலிக்கும் இது சிறந்த மருந்து. இதைத் தொடர்ந்து செய்தால், உடல் நரம்புகள் புத்துணர்வு அடைந்து நல்ல தூக்கம் கிடைக்கும்.
முகப்பருக்களை போக்கும்:
முகத்தில் மிகச் சிறிய துளைகள் உள்ளன. இவற்றில் சேர்ந்திருக்கும் அழுக்கை அகற்ற, எப்சம் உப்பு பயன்படும். அரை டீஸ்பூன் எப்சம் உப்பை முகத்தை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் க்ரீமில் கலந்து முகத்தில் தேய்க்கவேண்டும். பிறகு இதைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது, முகப்பரு போக்க சிறந்த மருந்து.
கால் அரிப்பு:
அதுமட்டுமல்லாமல் அரை கப் எப்சம் உப்பை இளஞ்சூடான ஒரு பக்கெட் நீரில் கலந்துகொள்ள வேண்டும். இதில் பத்து நிமிடங்கள் காலை முக்கி வைத்திருந்தால், கால் அரிப்பு, கால் துர்நாற்றம், கால் வெடிப்பு போன்றவை நீங்கும்.
வறண்ட உதடுகள்:
ஒரு டீஸ்பூன் எப்சம் உப்பை பெட்ரோலியம் ஜெல்லியில் கலந்துகொள்ள வேண்டும். இதை உதட்டில் தடவிவந்தால், உதடு மென்மையாக மாறும். வறண்ட உதடுகள் எப்சம் உப்பால் சரியாகும்.
முடி வளர்ச்சி:
சிறிது எப்சம் உப்பை ஹேர் கண்டிஷனரில் கலந்து தலைக்குத் தேய்க்கவேண்டும். இதை இருபது நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்துவந்தால், முடியில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறும். உச்சந்தலை தூய்மையாகும். முடி வளர்ச்சி அதிகமாகும்.
புழு மற்றும் அட்டை பூச்சிகள்:
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் சிறிதளவு எப்சம் உப்பு தெளிப்பதால், தோட்டத்தில் புழு மற்றும் அட்டை பூச்சிகள் வரத்தைப் போக்கலாம். இதனால் இந்த வகை புழுக்கள் ஊர்ந்து வருவது தடுக்கப்பட்டு, அவை நிரந்தரமாக உங்கள் தோட்டத்தில் குடியேறுவதைத் தடுக்க முடிகிறது.
தினமும் குளிக்கப் பயன்படுத்தும் துண்டை இரவில் சிறிது எப்சம் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் முக்கி வைத்தால், அடுத்தநாள் காலையில் மென்மையாக மாறி இருக்கும் இதைச் செடி, கொடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம்.
குறிப்பு : மருந்துக் கடைகளில் கிடைக்கும் எப்சம் உப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என அறிந்துகொண்டு, முறையாகப் பயன்படுத்துவது நல்லது.