எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
இலங்கையில் எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்தார்.
நாட்டில் இன்று சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை குறித்து விளக்கம் அளித்தபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பெற்றோலிய தொழிற்சங்கள் மற்றும் எதிர்க்கட்சியின் அரசியல்வாதிகள் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 4 மாதங்களாக அவர்கள் கூறியது போன்று எவ்வித எரிபொருள் பற்றாக்குறை ஏற்படவில்லை. நான் உறுதியளித்தேன் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன்னரே நான் அறிவிப்பேன் என்று. அதன்படி, செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி நாட்டில் கச்சா எண்ணெய் பற்றாக்குறையொன்று ஏற்பட வாய்ப்புள்ளது என நான் தெரிவித்தேன்.
கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நான் கூறியிருந்தேன். மீண்டும் அதே தான் கூறுகிறேன். நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் இல்லை. வீணாக குழப்பமடைய வேண்டாம்.