கனடாவில் வேலை வாய்ப்பு ;பல மில்லியன் ரூபா மோசடி
கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல மில்லியன் ரூபா மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் தகவல் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரின் 011 2 864 241 அல்லது 011 2 864 123 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறான சந்தேக நபர்கள் தொடர்பில் , இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.