ஜேர்மனியில் வேலை... இலட்சக்கணக்கில் பணத்தை இழந்த இலங்கையர்கள்! சிக்கிய நபர்
ஜேர்மனியில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சந்தேக நபரொருவர் செய்யப்பட்டுள்ளதாக கந்தர பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சுற்றிவளைப்பில் பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மாவட்ட நீதிபதி மற்றும் சட்டத்தரணி என்ற போர்வையில் ஜேர்மனியில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து 24 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் மூன்று முறைப்பாடுகள் காணப்படுவதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.