இலங்கையில் பெரும் சோகம்: துரதிஷ்டவசமாக உயிரிழந்த கொழும்பு மாநகர சபையின் பணியாளர்கள்
கொழும்பு புறநகரப் பகுதியான கொட்டாஞ்சேனை – ஹெட்டியாவத்தை சுற்றுவட்டத்தில் உள்ள கழிவு நீர் வெளியேற்றும் குழியில் தவறி வீழ்ந்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்றைய தினம் (27-03-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கழிவு நீர் வெளியேற்றும் குழியை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் பணியாளர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த சமபவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சுத்திக்கரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த பணியாளர்கள் இருவரில் ஒருவர் மலசலகூட குழியில் தவறி விழுந்துள்ளார்.
அவரை காப்பாற்ற மற்றொரு நபரும் மலசலகூட குழியில் இறங்கிய வேளை, அவரும் மலசலகூட குழியில் விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவைகள் திணைக்கள அதிகாரிகளினால் அவர்கள் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.