குவைட்டில் வசிப்பவர்களுக்கு அவசர முன்னெச்சரிக்கை அறிவிப்பு
பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் குவைட் உள்துறை அமைச்சு அவசர கால முன்னெச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் புதன்கிழமை (8) அதிகாலை 6 மணி வரை பொதுமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மிகவும் அத்தியாவசியமான காரணங்களுக்காக அன்றி மற்றைய நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும், பாதுகாப்புப் படையினரின் அவசர கால நடவடிக்கைகளுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், ஏற்படக்கூடிய அவசர நிலைகளைச் சமாளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் குவைட் உள்துறை அமைச்சு அவசர கால முன்னெச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.