நள்ளிரவில் பாடசாலைக்குள் புகுந்த காட்டுயானைகள் ; அச்சத்தில் வாழும் தமிழர் பகுதி மக்கள்
மட்டக்களப்பு – ஆரையம்பதி , பாலமுனை நகர் பகுதிக்குள் இரவு வேளையில் திடீரென உள் நுழைந்த காட்டு யானைகளால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.
குறித்த பகுதிக்குள் இரவு நேரம் உள் நுழைந்த காட்டு யானைகள் பாலமுனை நகர் பகுதி பாடசாலை ஒன்றின் முன் நுழைவாயில் கதவினை உடைத்து, சேதப்படுத்தியதோடு மக்களின் குடியிருப்பு கானி சுற்றுப்புற வேலிகளை துவம்சம் செய்து ஆரையம்பதி நகர் பகுதிக்குள் உள் நுழைந்து வேலிகளையும் சேதப்படுத்தியுள்ளன.

பின்னர் இதனை அவதானித்த பிரதேச மக்கள் காட்டு யானைகள் துரத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தக் காட்டுயானைகள் கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேலாக உணவுதேடி சுற்றித்திரிந்து அச்சுறுத்தி வருவதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் .