மின்சார கட்டணம் தொடர்பில் அமைச்சர் எடுத்துள்ள அதிரடி முடிவு!
நாட்டில் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (06-06-2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி 0-30 யூனிட் ஒன்றின் விலை 8 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும், 30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு 20 ரூபாயிலிருந்து 9 ரூபாவாகவும், 60-90 அலகுகள் 30லிருந்து 18 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது.
120 வரையான அலகுக்கு 50 முதல் 30 ரூபா வரையும் குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.