வடமராட்சியில் உயிரிழந்த வயோதிபர்: பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்
உயிரிழந்த நிலையில் மீட்கபட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட வயோதிபர் ஒருவருக்கு கொரோனா தெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குச்சம் ஒழுங்கை, வல்வெட்டித்துறை, வடமராட்சியைச் சேர்ந்த 76 வயதுடைய செங்கல்வரதராசா சக்திவேல் என்பவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
குறித்த வயோதிபர் நேற்று வீட்டில் வழுக்கி விழுந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா, விசாரணைகளை மேற்கொண்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.