விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட மோதல்: பெண் உட்பட மூவர் மீது கொடூர சம்பவம்!
எஹலியகொட எல்லாவல பிரதேசத்தில் விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட மோதலின் போது இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் குழு ஒன்றினால் தாக்கப்படும் காணொளி சமூக வலைதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (27-01-2022) இரவு இடம்பெற்றுள்ளதுடன், விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் குறித்த தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.
கடனுக்கு சிகரெட் கேட்ட சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து குறித்த நபர் கும்பல் ஒன்றுடன் வந்து அவர்களை தாக்கியதாக விற்பனை நிலைய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் எஹலியகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.