இலங்கையில் முட்டைக்கு வந்த சோதனை!
இலங்கையில் உள்ள சமூக வலைத்தள பயனர்கள் கோழி முட்டைக்கு புதிய பட்டப் பெயர் ஒன்றை சூட்டியுள்ள நிலையில் அது பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
அதாவது அவர்கள் முட்டைக்கு “அவன்கார்ட் கனரக ஆயுதம்” என பட்டப்பெயரை சூட்டியுள்ளனர். “அவன்கார்ட் கனரக ஆயுதம்” தாருங்கள் என சிலர் கடைகளில் கேட்கும் பதிவுளும், “ முதலாளி 10 அவன்கார்ட் கனரக ஆயுதங்களை தாருங்கள்” என சிங்களத்தில் எழுதப்பட்ட புகைப்பட பதிவுளை சமூக ஊடகங்களில் காணக் கூடியதாக உள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டின் மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமையே முட்டைக்கு இப்படியான பட்டப்பெயரை வர காரணமாக அமைந்துள்ளது.
இந்த தாக்குதலை நடத்த வந்த இரண்டு பேரை மாநாட்டில் கலந்துக்கொள்ள வந்தவர்கள் பிடித்தபோது, அவர்கள் தாம் அவன்கார்ட் நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களாக கடமையாற்றுவதாக கூறியிருந்தனர்.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்திற்கு மிக நெருக்கமான நபராக கருதப்படும் நிஷ்சங்க சேனாதிபதியே அவன்கார்ட் ( Avant Garde) நிறுவனத்தின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.