பூண்டை ஓவரா சாப்பிட்டாலும் ஆபத்துதானாம்; இனி சாப்பிடாதிங்க!
பூண்டு சாப்பிடுவது நமக்கு பல வகையில் நன்மை செய்வது உண்டு .குறிப்பாக வாயு தொல்லையை பூண்டு விரட்டியடிக்கும். பல்வலியுள்ளோர் பூண்டை பல்லில் வைத்தால் பல்வலி ஓடி விடும் .
அதுமட்டுமல்லாது பூண்டு ஒரு கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டது. ஆனால் ,இவ்வளவு நன்மைகள் கொண்ட பூண்டை அதிகம் எடுத்து கொள்வதும் நமக்கு கெடுதல் விளைவிக்குமாம் .
அதிகமா பூண்டு உண்பதால் உண்டாகும் கேடுகள்
1.சிலர் பூண்டை சட்னி ,துவையல் ,ஊறுகாய் ,குழம்பு என்று பல வகைகளில் தினம் சேர்த்து கொள்வர் .இப்படி அதை அதிகமாக உட்கொள்வோருக்கு இரத்தப் போக்கு பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புள்ளது .
2.நாம் நமது கல்லீரலை காக்க வேண்டும் .பூண்டில் அல்லிசின் என்ற கெமிக்கல் அதிகம் இருக்கிறது .அதனால் இதை அதிகமாக உட்கொண்டால் கல்லீரலில் உள்ள நச்சுக்களின் அளவு அதிகரித்து , கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.
3.சிலருக்கு திடீரென்று சருமத்தில் அரிப்பு உண்டாகும் .இதற்கு அதிகமாக பூண்டு சாப்பிடுவதால் உண்டான விளைவாக கூட இருக்கலாம்.
4.சிலர் வீட்டு வைத்தியம் செய்கிறேன் என்று பச்சையாக பூண்டை சாப்பிடுவது உண்டு .இப்படி எடுத்துக் கொள்வதால் தலைவலி உண்டாகும் .
5.சிலர் வாயு தொல்லையை விரட்டும் என்று பூண்டை அதிகம் சாப்பிடுவர் .ஆனால் பூண்டின் அதிகப்படியான பயன்பாடு வாய்வு தொல்லை மற்றும் வயிற்று வலியை உண்டாக்கி விடுமாம்.