போதைப்பொருள் கடத்தல்காரர் திருடப்பட்ட சைக்கிள்களுடன் கைது
திருடப்பட்ட சைக்கிள்களுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு மட்டக்குளி சமகிபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட சைக்கிள்கள்
சந்தேக நபரின் வீட்டிலிருந்து 170 சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட சைக்கிள்களின் மொத்த பெறுமதி 35 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் பல்வேறு பிரதேசங்களில் சைக்கிள்களை திருடி, அதனை சந்தேக நபரிடம் விற்பனை செய்து போதைப்பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.