குடிபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திய சாரதி ; அவதிப்பட்ட பாடசாலை மாணவர்கள்
குடிபோதையில் பாடசாலை பேருந்தை ஓட்டிச் சென்ற பேருந்து சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (19) மதியம், கட்டுபொத்த போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் கட்டுபொத்த நகரில் பாடசாலைபேருந்தை ஆய்வு செய்தனர். சாரதி குடிபோதையில் இருப்பது கண்டறியப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் 52 வயதுடைய கட்டுபொத்த, ரதலியகொட பகுதியைச் சேர்ந்தவர்.
பேருந்து சாரதி கைது செய்யப்பட்ட நேரத்தில், பேருந்தில் 16 பாடசாலை மாணவர்களும் இரண்டு தாய்மார்களும் பயணித்தனர்.
சம்பந்தப்பட்ட பேருந்தும் பொலிஸாரால் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் இன்று (20) நாரம்மல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
தற்போது, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களையும், போக்குவரத்து விதிமீறல்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.