துப்பாக்கிச்சூடு தொடர்பில் டொனாலட் டிரம்ப் வெளியிட்ட பரபரப்பான பதிவு!
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் ஜானதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.
இவ்வாறான சூழலில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடந்த பேரணியில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளாரான டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார்.
அப்போது, அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் சிறு காயங்களுடன் உயிரி தப்பினர், பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இச் சம்பவத்திற்கு பின்னர், டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடக பதிவில்,
அமெரிக்காவின் உளவு அமைப்புக்கும், பொலிஸார் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
பேரணியில் கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்த மற்றொரு நபரின் குடும்பத்தினருக்கும் என்னுடைய இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.
நம்முடைய நாட்டில் இதுபோன்ற செயல்கள் நடைபெறும் என்பது நம்ப முடியாதது.
இந்த நேரத்தில், துப்பாக்கி சூடு நடத்தியவரை பற்றி எதுவும் எனக்கு தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.
துப்பாக்கி குண்டு அவருடைய வலது காதின் மேல் பகுதியை துளைத்து சென்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், எனக்கு ஒரு சத்தம் கேட்டது. ஏதோ தவறாக நடக்கிறது என உடனடியாக எனக்கு தெரிந்தது.
துப்பாக்கி குண்டு துளைத்து சென்றது என உணர்ந்தேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் அவர், அதிக அளவில் ரத்தம் கசிந்தது. அதனால், என்ன நடக்கிறது என நான் உணர்ந்தேன். கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.