புதன்கிழமைகளில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்துடாதீங்க ; விநாயகரின் கோபத்திற்கு ஆளாவீர்கள்
ஜோதிட சாஸ்திரப்படி, புதன்கிழமை என்பது புதன் பகவானுக்கு உரிய நாளாகும். ஞானம், அறிவு, தொழில், வருமானம், புத்திகூர்மை ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக புதன் பகவான் கருதப்படுகிறார். அதனால் தான் ஞான முதல்வன் என போற்றப்படும் விநாயகப் பெருமானுக்கும் உரிய தினமாக புதன்கிழமை சொல்லப்படுகிறது'
புதன்கிழமையில் செய்ய வேண்டிய காரியங்கள், தவிர்க்க வேண்டிய காரியங்கள் என சில விதிமுறைகள் உள்ளது. இந்த நாளில் தெரியாமல் செய்யும் சில தவறுகளால் நம்முடைய வாழ்க்கையிலும், தொழிலிலும் பல பாதிப்புக்களை சந்திப்பதுடன், விநாயகப் பெருமானின் கோபத்திற்கும் ஆளாக வேண்டி இருக்கும்.
புதன்கிழமையில் நாம் செய்ய கூடாத விடயங்கள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.
புதன்கிழமையில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்
புதன்கிழமை அன்று கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ கூடாது. அப்படி கடன் கொடுத்தால் கொடுத்த பணத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. கடன் வாங்கினால், அதிக கடன் வாங்கி சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இந்த நாளில் பண பரிவர்த்தனை தொடர்பான வேலைகளை செய்வதை தவிர்ப்பது நல்லது.
புதன்கிழமை அன்று யாரிடமும் கடுமையான சொற்களை பேசக் கூடாது. இதனால் விநாயகரின் கோபத்திற்கு ஆளாகலாம். மற்றவர்களிடம் வாக்குவாதம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
பழைய பேப்பர், புத்தகம் ஆகியவற்றை விற்கவோ, எரிக்கவோ கூடாது.
பழைய பித்தளை பொருட்களை கொடுத்து விட்டு புதிய பொருட்களை மாற்றக் கூடாது.
புதிய தொழில் முதலீடுகளை தவிர்க்க வேண்டும். இதனால் அசுபமான பலன்களை கிடைக்கும். புதிய தொழிலில் வளர்ச்சி, அதிக லாபத்தை பெற வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருட் கடாட்சம் நிறைந்த வெள்ளிக்கிழமை தான் அதற்கு உரிய நாளாகும்.
புதன்கிழமையில் கருப்பு நிற ஆடைகளை அணியக் கூடாது. இதனால் விநாயகரின் கோபத்திற்கு ஆளாவீர்கள். இதனால் வீட்டில் அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். மாறாக பச்சை நிற ஆடைகளை அணிவது சிறப்பு. இது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.
புதன்கிழமையில் மறந்தும் கூட நகையை அடகு வைத்து விடக் கூடாது. அப்படி வைத்தால் அதை மீட்பதற்கு அதிகம் கஷ்டப்பட வேண்டி இருக்கும்.