மோட்டார் சைக்கிள் மீது நாய் மோதியதில் ஏற்பட்ட விபரீதம்
காலி - கொழும்பு வீதியில் தடல்ல மயானத்துக்கு அருகில் தந்தை மற்றும் மகன் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது நாய் மோதிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இவ் விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்
தடல்ல வலவத்தையைச் சேர்ந்த சுதத் நிஹால் (59) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தனது 32 வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன் போது தடல்ல மயானத்துக்கு அருகில் நாய் ஒன்று மோட்டார் சைக்கிளை நோக்கிப் பாய்ந்தபோதே கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் கீழே வீழ்ந்துள்ளது.
இதன்போது பின்னால் வந்த காலி - கொழும்பு தனியார் பேருந்து வீதியில் வீழ்ந்து காணப்பட்ட நபரை மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பேருந்து சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளார்.