மனிதர்களின் மரணம் சம்பவிக்கையில் உடலில் இதெல்லாம் நிகழுமா? ஆரய்ச்சியாளர்கள் கூறுவது என்ன!
இப்பூமியில் பிறந்த அனைவருமே ஒரு நாள் மரணத்தை தழுவவேண்டும் என்பது எழுதப்படாத விதி. நோய்நொடிகளில் இருந்து நாம் தப்பினாலும் மரணத்தின் பிடியில் இருந்த யாரும் தப்பிக்க முடியாது.
என்றோ ஒரு நாள் நம்மை மரணம் அழைக்கும் என்பது உறுதி. எத்தை கோடி கொடுதாலௌம் அதனை தவிர்க்க முடியாது. ஆனால் யாருக்கு எப்போது மரணம் ஏற்படும் என்பதும் மனிதர்களுக்கே தெரியாத ரகசியம்.
விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு
உயிர் பிரியும் நேரம் நமக்கு என்ன நடக்கும், அப்போது நமது உடலிலும் மூளையிலும் என்ன நடக்கும் என்பது மர்மமாகவே காணப்படுகின்றது.
இதைக் கண்டறிய நரம்பியல் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உயிர் பிரியும் நேரத்தில் இருப்பவர்களின் மூளையில் என்ன நடந்தது அது எப்படி மரணத்திற்கு வழிவகுத்தது என்பதை இந்த ஆய்வாளர் குழு அடையாளம் கண்டுள்ளது.
இதற்கு முன்பு விலங்குகளிடையே நடத்தப்பட்ட ஆய்வுகளில் காமா அலைகளின் எழுச்சி ஏற்படுவது தெரிகிறது.
அதுவே இதயம் மற்றும் சுவாசம் நிற்கக் காரணமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
காமா அலைகளின் எழுச்சி
அவர்கள் மூளையில் ஏற்படும் எலக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG) மற்றும் எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) சிக்னல்களை ஆய்வு செய்தனர்.
அந்த நான்கு நோயாளிகளும் நீண்ட காலமாக கோமா நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் இரண்டு நோயாளிகளில் காமா செயல்பாடுகளால் குளோபல் ஹைபோக்ஸியா ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது மாரடைப்பு ஏற்படும் சமயத்தில் மூளையின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை நாம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.
நினைவிழப்பு ஏற்படும்
நினைவிழப்பு ஏற்படும் என்று தெரிந்தாலும் இறக்கும் செயல்பாட்டின் போது நோயாளிகள் மறைமுக உணர்வுடன் இருக்க முடியுமா என்பது தெளிவாக இல்லை.உயிரிழந்தோரில் ஒருவரின் மூளையின் ஒரு பகுதியில் ஒரு நீண்ட காமா அலை ஏற்பட்டுள்ளது.
இவை மூளையின் இரு பக்கத்திற்கும் இருக்கும் தொடர்பைக் காட்டுகிறது. உயிரிழக்கும் போது, மனித மூளையில் பின்புற கார்டிகல் பகுதிகள் செயல்படுத்தப்படுகிறதா என்பது நாம் இன்னும் தீர்மானிக்கவில்லை.
காமா அலை ஆரம்பத்தில் மூளையின் வெப்ப மண்டலம் என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் அமைந்திருந்தது. கனவு காணும்போது, மர்ம காட்சிகளைக் காண்பதாகப் புகார் அளிக்கும் நோயாளிகளுக்கும் இங்கே தான் மூளை ஆக்டிவாக இருக்கும். மூளையில் உள்ள வெப்ப மண்டலம் என்பது நினைவுகள் செயலாக்கத்திற்கு முக்கிய பகுதியாகும்.
அதேநேரம் நோயாளிகள் உயிரிழந்துவிட்டதால் உயர்ந்த காமா அலைகள் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிவதில்லை.ஆனால் உயிரிழக்கும் சமயத்தில் நமது மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் என்பதையே இது காட்டுகிறது.
எனவே மாரடைப்பு என்பது இதயத்தை மட்டும் பாதிக்காமல் மூளையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.