அவிசாவளை வைத்தியசாலையில் கொரோனா வார்டில் பணிபுரியும் வைத்தியரின் உருகவைக்கும் பதிவு!
அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் நஜித் இந்திக என்பவர் கொரோனாவால் நாடு தற்போது உள்ள நிலைமை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்தது,
அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அவர் உட்பட 12 வைத்தியர்கள் கொரோனா வார்டுகளில் பணியாற்றி வருகின்றனர். இப்போது கொரோனா வார்டுகள் நிரம்பிவிட்டதாக தெரிவித்துள்ளனர்,
மேலும் தினமும் 100 கொரோனா நோயாளிகள் கதிரைகள் மற்றும் தரையில் அமர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் குறித்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இதுவரை வந்த கொரோனா நோயாளர் எண்ணிக்கை, அவர்கள் சிரமப்படும் விதம், ஒட்சிசன் கொடுக்கப்பட வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை, சிரமப்படும் நோயாளிகளின் வயது, இவை அனைத்தும் ஒரே வாரத்தில் மாறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அது ஒரு பெரிய வித்தியாசம். வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் எண்ணிக்கை 3 மடங்கிலும் அதிகம். எழுபது மற்றும் எண்பதுகளின் பெற்றோர்கள் முன்பு கொஞ்சம் கடினமாக இருந்தனர்.
இப்போது அது முப்பது மற்றும் நாற்பது வயதுடையவர்களுக்கு கடினமாக உள்ளது. இன்னும் இன்னும் ஒட்சிசன் விநியோக இயந்திரங்கள் உச்சபட்ச நிலையில் இயங்கினாலும் கூட மக்கள் இறப்பதற்காக காத்திருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நாற்பது வயதுள்ள ஒரு தாய் தனது மகளுக்கு முன்பாக மூச்சுத்திணறலால் இறந்தார், CPAP இயந்திரம் பொருத்தப்பட்டு பேச முடியாத ஒரு மனைவி தன் கணவனைப் பிடித்தவாறு விடைபெற்றார்.
தனது மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பிரசவிக்க தயாராகிக் கொண்டிருந்த போது அவரது 27வயது கணவன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பப்பட்டார். அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
முன்பு ஓரிரு நாட்களில் நடைபெற்ற இறப்புகள் தற்போது ஒரு வாரத்தில் ஒரு நாளில் 4, 5 நாட்களிற்கு மாறியுள்ளது.
இந்த வீதத்தில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், ஒட்சிசன் சிலிண்டர் இல்லாததால் மக்கள் கதிரைகளிலும், தரையிலும் முற்றத்திலும் இறந்து விடுவார்கள்.
கடந்த மாதம் அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் 12 வைத்தியர்களில் ஒருவரும், 30 தாதிகளில் 10 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.