இளநீர் பருகுவதால் ஏற்படகூடிய நன்மைகள் என்ன தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்
நீங்கள் இளமையாகவும், பொலிவுடனும் இருக்கவேண்டுமென்றால் அதற்கு முதலில் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு பக்கபலமாக இருப்பது இளநீர்.
இளநீர் பருகுவதால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும் மற்றும் இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களை சேர்த்து உடலின் செயல்த்திறனை அதிகரிக்கும். மேலும் உடலின் வளர்ச்சிக்கு தேவையான நுண்ணூட்ட சத்துக்கள் இளநீரில் அதிகம் காணப்படுகின்றன.
நாளாந்தம் 100 கிராம் இளநீரை குடித்துவந்தால் அதில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான சுண்ணாம்பு சத்து 29 மி.கி உள்ளது. ரத்த விருத்திக்கு தேவையான இரும்பு சத்து 0.1 மி.கி. இருக்கிறது. குளோரின் உப்பு 183 மி.கி. உள்ளது.
இதேவேளை இளநீர் உடலில் இருக்கும் இரத்தத்தை சுத்தப்படுத்தும். இளநீரில் இருக்கும் சோடியம் உப்பு வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கவும், தசை பகுதியில் அதிகமாக சுண்ணாம்பு சத்து தங்க விடாமல் தடுக்கவும் உதவுகிறது.
இளமையை பாதுகாக்கும் ஒரு அரிய பானம் இளநீர். 100 கிராம் இளநீரில் 312 மி.கி. பொட்டாசியமும், 30 மி.கி. மெக்னீசியமும் உள்ளது. இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும், தசைகளுக்கும் புத்துணர்ச்சியையும், வலுவையும் ஊட்டும்.
தினமும் ஒரு இளநீர் நீங்கள் குடித்தால் உங்கள் உடலுக்கு 37 மி.கி. பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சத்துக்கள் கிடைக்கின்றன. பாஸ்பரஸ் மூளையையும், நரம்பு மண்டலத்தையும் சீராக இயங்க வைக்கும். வைட்டமின், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பெண்கள் மற்றும் ஆண் பெருபாலும் சருமம் பளபளனும் இருக்க ஆசைப்படுகிறார்கள். அதற்கு தேவையான கந்தகம் உப்பு 24 மி.கி. இளநீரில் இருக்கிறது. கந்தக உப்பு ரத்தம் சுத்தம் அடையவும், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவும். தோல், முடி, நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் துணை புரியும்.
சாப்பிடும் உணவு உடனடியாக ஜீரணமாகுவதற்கு இளநீர் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது, செரிமான உறுப்பு கோளாறுகளால் குழந்தைகள் பாதிக்கப்படும்போது இளநீர் அருந்தக் கொடுக்கலாம்.