அடர்த்தியா தலைமுடி வளர வெங்காயத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
இன்று பலருக்கும் இருக்கும் பிரச்சனை தலைமுடி தான். முடி அடர்த்தி இல்லை, முடி கொட்டிகிட்டே இருக்கு, சீக்கிரமே நரைமுடி வருது, முடி ஆரோக்கியம் இல்லை. நீளம் இல்லைன்னு எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் முடி பிரச்சனை இருக்கவே செய்யுது.
இதை செய்தால் சரியாகும் அதை செய்தால் சரியாகும் என்று பல வைத்தியங்களை முயற்சித்திருக்கலாம். அதில் வெங்காயமும் கூட இருக்கலாம். ஆனால் வெங்காயத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே பலன் கிடைக்கும்.
ஒரு வெங்காயம் வச்சு எப்படி முடி பிரச்சனையை தீர்க்கலாம் என நாம் இங்கு பார்ப்போம்.
பலரும் முடிக்கு அடிக்கடி வெங்காயத்தை சாறு எடுத்து நேரடியாக அப்ளை செய்வார்கள். ஆனால் அப்படி செய்யகூடாது. இதனால் உச்சந்தலையில் அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் வரும்
அவர் சொல்வது போல் பலரும் வெங்காயச்சாற்றை நேரடியாக முடிக்கு தடவுவது உண்டு. வெங்காயச்சாறு தேய்த்த பிறகு உச்சந்தலை எரிச்சல் இருந்தால் அதற்கு காரணம் இதிலிருக்கும் சல்பர் தான்.
வெங்காயச்சாற்றை நேரடியாக பயன்படுத்தாமல் சூடு செய்து பயன்படுத்தலாமா என்று கேட்கலாம். ஆனால் வெங்காய்ச்சாற்றை சூடு செய்யும் போது அதில் இருக்கும் சல்பர் அழிந்துவிடவும் வாய்ப்புண்டு.
தலைமுடிக்கு வெங்காயம் எப்படி பயன்படுத்தணும்?
மீடியம் சைஸ் வெங்காயத்தை நறுக்கி (சின்ன வெங்காயமும்) பயன்படுத்தலாம். மிக்ஸியில் அரைத்து சாறு மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். இதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலோவேரா 2 டீஸ்பூன் அளவு கலந்து உச்சந்தலையில் தடவுங்கள். பிறகு 30 நிமிடங்கள் கழித்து பிறகு மைல்டாக ஷாம்பு கொண்டு கூந்தலை அலசி விடவும்.
வெங்காயத்தை சாறு எடுத்து அதை தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை உடன் சேர்த்து பயன்படுத்துவதால் இரண்டு விதமான நன்மைகள் கிடைக்கும். முதல் நன்மை உச்சந்தலை எரிச்சலை இது குறைக்கும்.
இரண்டாவதாக இது carrier molecule இது ஒரு மூலக்கூறு. இது சல்பரை கூந்தலுக்கு எடுத்து செல்ல உதவும். வெங்காயத்தை கூந்தலில் பயன்படுத்தவும் அவை அரிப்பு எரிச்சல் வராமல் தடுக்கவும் சிறந்த வழி அதை கற்றாழை அல்லது தேங்காய் எண்ணெயுடன் பயன்படுத்துவதே சிறந்த பலனை கொடுக்கும்.