வெறும் வயிற்றில் இதை எல்லாம் சாப்பிடக்கூடாது; ஏன் தெரியுமா?
பொதுவாக காலை உணவினை ஸ்கிப் செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றபோதும் சிலர் டயட் என்ற பெயரில் காலை உணவினை தவிர்த்து வருகிறார்கள். இதன் காரணமாக வயிற்றில் அசிடிட்டி ஏற்பட்டு அது பல விதமான பிரச்னைக்கு வழிவகுக்கும். அதே போல் சில உணவுகளையும் காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அவையாவன;
சோடா:
சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
தக்காளி:
தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட்தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, வயிற்றில் கற்களைக்கூட உருவாக்கும்.

மாத்திரைகள்:
எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக் கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.
ஆல்கஹால்:
பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப்படலத்தில் எரிச்சலை ஏற்படுத்துவதுடன் மிகுந்த அபாயத்திற்கும் உள்ளாகக்கூடும்.
காரமான உணவுகள்:
காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புகளையும் ஏற்படுத்தும்.
காபி:
காபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்னைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தபின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
டீ:
காபியைப் போலவே டீயிலும், காஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்தபின் வயிற்றுப்படலத்தைப் பாதிக்கும் என கூறப்படுகின்றது.

தயிர்:
தயிரில் என்னதான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப்படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தி விடும்.
வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு:
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச்செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி விடும்.