யாழ் போதனா வைத்தியசாலைக்கு கிளினிக்குகளுக்கு வரவேண்டாம்!
நாட்டில் நிலவும் சீரற்ற காலை காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு நோயாளிகள் கிளினிக்குகளுக்கு வரவேண்டாம் என வைத்தியசலை பணிப்பாளர் , மருத்துவர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவரது சமூகவலைத்தளத்தில்,

யாழ் மாவட்டம் கடுமையாக பாதிக்கபடலாம்
தற்போது நிலவும் கடுமையான மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக சேவைகளை மட்டுப்படுத்தி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மருத்துவ கிளினிக் மற்றும் பிற கிளினிக்குகளுக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். காலநிலை சீரான பின் வழக்கமான சிகிச்சைகளைப் பெற முடியும் என்பதை அறியத் தருகிறோம்.

குறிப்பாக நாளை யாழ் மாவட்டம் கடுமையாக பாதிக்கபடலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. கிளினிக் மருந்துகள் கைவசம் இல்லாதவர்கள் கட்டாயம் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அல்லது, இயலாமை இருப்பின், கிளினிக் கொப்பிகளை அனுப்பி மருந்துகளைப் பெறவும் முடியும். மேலதிக தகவல்கள் தேவையெனில், வைத்தியசாலை அனர்த்த முகாம் பிரிவை தொடர்பு கொள்ளலாம் எனவும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி பதிவிட்டுள்ளார்.
தொலைபேசி மற்றும் What's up இலக்கம்: 070 1222261
