விவாகரத்து விவகாரம்; சமந்தாவுக்கு அட்வைஸ் செய்த வனிதா!
நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து செய்தியாகும். சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்த விவாகரத்து கிட்டத்தட்ட தென்னிந்திய திரையுலகம் முழுவதையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் சின்னத்திரை பிரபலம் வனிதா விஜயகுமார் நடிகை சமந்தாவிற்கு அட்வைஸ் செய்துள்ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவாகரத்து செய்ய இருப்பதை அதிகாரப்பூர்வமான செய்தியாக வெளியிட்டார்கள்.
இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக பல கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் இடம்பெற்றிருந்தன. நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொள்வது பல ஆண்டுகளாக, இந்திய திரையுலகில் தொன்று தொட்டு வரும் பழக்கம் என்பதால் இதுவும் கடந்து போகும் என்றே பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அதிர்ச்சியூட்டும் விதமாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து செய்தி வெளிவந்தது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல வெற்றிப் படங்களில் நாயகியாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இருவரும் முதன்முறையாக சேர்ந்து நடித்திருந்தனர்.
பல ஆண்டுகளாக காதலித்து இவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் விமர்சையாக திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பின்னும் சமந்தா தொடர்ந்து திரைப்படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் ஃபேமிலி மேன் என்ற வெப் சீரிஸில் மிகவும் கவர்ச்சியான வேடத்தில் நடித்ததும், இவரின் கதாபாத்திரமும் பெரிய சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் அழகான காதல் ஜோடிகளாக வெற்றிகரமான திருமண வாழ்க்கையில் திருஷ்டி ஏற்பட்டது போல அவர்களின் பிரிவு ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியது. இந்நிலையில் அவர்களின் விவாகரத்துக்கு சமந்தா தான் காரணம் என்று பலரும் பலவிதமாக கூறி வருகின்றனர். இதற்கிடையே, நடிகை மற்றும் சின்னத்திரை கலைஞரான வனிதா விஜயகுமார் சமந்தாவிற்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.
அதாவது , “சமூகம் என்றெல்லாம் எதுவும் இல்லை. உன்னுடைய வாழ்க்கையை நீ வாழு. நம்முடைய புகைப்படங்களை மட்டும் தான் மக்கள் பார்க்கிறார்கள். வீடியோக்களை அல்ல. வாழ்க்கை அற்புதமானது, கவலைப்பட்டு அதைத் தொலைக்க வேண்டாம். எது நடந்தாலும் அதற்கொரு காரணம் உள்ளது. உன்னுடைய பாதையில் முன்னேறிச் செல் என்று வனிதா விஜயகுமார் கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.