முப்படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கின்றது!
ஹாலி முகத்திடல் போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி (Hanaa Singer) தெரிவித்துள்ளார்.
கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று அதிகாலை முப்படையினர் அங்கிருந்து அகற்றினர்.
Gravely concerned by use of force to disperse protestors.
— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) July 22, 2022
Journalists and human rights defenders have a right to monitor demonstrations and their functions should not be impeded. pic.twitter.com/iqcXvzNtEC
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி (Hanaa Singer) தனது டுவிட்டர் பக்கத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
போராட்டக்காரர்களை கலைக்க படையினரை பயன்படுத்தியமை கவலையளிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க உரிமை உண்டு.
எனவே அவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தப்படக் கூடாது எனவும் ஹனா சிங்கர் ஹம்டி குறிப்பிட்டுள்ளார்.