குழந்தைகளிடையே பரவி வரும் நோய்; எச்சரிக்கும் மருத்துவர்
தற்போதைய காலத்தில் குழந்தைகளிடையே தட்டம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா நேற்றைய நிலவரப்படி 12 சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் மற்றும் சிவப்பு புள்ளிகள் இந்த நோயின் அறிகுறிகளில் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த சில வருடங்களில் சிறுவர்களுக்கு புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி வருவதாக தெரிவித்த மருத்துவர் ஒவ்வொரு வருடமும் 19 வயதுக்குட்பட்ட 900க்கும் அதிகமான சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர ஆண்டுதோறும் சுமார் 100 குழந்தைகள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவதாகவும் இது போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும்
"இவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்வதற்கு போசாக்கான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் மற்றும் சிறுவர்கள் தொடர்ந்து விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும் எனவும்" தெரிவித்துள்ளார்.
வைத்தியர் தீபால் பெரேரா, குழந்தைகளை கையடக்கத்தொலைபேசியிலிருந்து விலக்கி வைப்பதே சிறந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் உணவில் எண்ணெய், சர்க்கரை போன்றவற்றை முடிந்தவரை பயன்படுத்தாமல் இருந்தால் நாளை ஆரோக்கியமான குழந்தைகள் சமூகத்தை உருவாக்கலாம் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.