அதி வேகத்தால் நேர்ந்த விபரீதம்
அவிசாவளை, மாதோல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (23) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பயணிகள் இறங்குவதற்காக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் மூன்று வயது குழந்தையின் சிறுநீரகங்கள் மாயம்? நியாயம் கேட்ட எம். பி
விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மோட்டார் சைக்கிள் செலுத்துனரின் உடல் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.