அதிகாலை வீட்டுக்குள் நுழைந்து பெறுமதியான தங்கம், பணம் திருடிச் சென்ற மர்ம நபர்கள்!
திம்புள்ள – பத்தனையில் உள்ள இரு வீடுகளுக்குள் நுழைந்து தங்கம், பணம் என்பன திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (03-06-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் இரு வீடுகளில் மொத்தமாக 2 பவுண் தங்க நகை மற்றும் 55, 850 ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இரண்டு வீடுகளிலும் உரிமையாளர்கள் உறக்கத்தில் இருந்த நிலையில்,வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு உள் நுழைந்தவர்களால் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளும் பணமும் திருடப்பட்டுள்ளதாகவும் காலை எழுந்து தமது கடமைகளை செய்து கொண்டு இருந்ததாகவும் பின்னர் அலுமாரியை திறந்து இருந்ததை பார்த்தே திருட்டு இடம்பெற்றது தெரியவந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸாரும், நுவரெலியா தடயவியல் பிரிவு பொலிஸாரும் மோப்ப நாயுடன் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.