NPP வெற்றி பெறாத சபைகளுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என நான் கூறவில்லை ; ஜனாதிபதி அநுர
உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக தான் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் எதிர்க்கட்சிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திய ஜனாதிபதி,
உள்ளூராட்சி மன்றங்கள்
மத்திய அரசால் கவனமாக சேகரிக்கப்படும் நிதி ஊழல் நிறைந்த உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படாது என்று மட்டுமே கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"உள்நாட்டு வருவாய்த் துறையுடனான தினசரி சந்திப்புகள் மற்றும் சுங்கத் துறையை நெருக்கமாகக் கண்காணித்தல் மூலம், தற்போது திறைசேரியிடம் உள்ள பணத்தை நாங்கள் சேகரித்துள்ளோம்.
கவனமாக சேகரிக்கப்பட்ட அந்தப் பணத்தை ஊழல் நிறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒப்படைக்க முடியாது. நுவரெலியா நகராட்சி மன்றத்திற்குள் ஒரு குழு ஊழல் நிறைந்ததாக இருந்தால், இந்த நிதியை நாம் ஏன் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்?" என கேள்வியெழுப்பியுள்ளார்.
மத்திய அரசு பொது நிதியை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்ப்பது போல, உள்ளாட்சி மன்றங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
"மத்திய அரசு திருடாமல், உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்ந்து திருடும்போது என்ன நடக்கும்? மத்திய அரசு வீண்விரயத்தைத் தவிர்க்கும் அதே வேளையில், பிரதேச சபைகள் பணத்தை வீணாக்குகின்றன.
மத்திய அரசு தனது கடமைகளைச் செய்கிறது, ஆனால் உள்ளூராட்சி மன்றங்கள் மக்களைக் காட்டிக் கொடுக்கின்றன.
மத்திய அரசால் கவனமாக சேகரிக்கப்படும் நிதி - மக்களின் பணம் - பிரதேச சபைகளுக்கோ அல்லது நகர சபைகளுக்கோ தவறாகப் பயன்படுத்தப்படுவதற்காக ஒப்படைக்கப்படாது என்பதை வலியுறுத்தியுள்ளார்.