விருந்திற்கு வராமல்போன நபர்களிடம் அபராதம் கேட்டு பில் அனுப்பிய மணமக்கள்! பரபரப்பு சம்பவம்
திருமண விருந்திற்கு அழைத்தவர்கள் சிலர் வராமல் போனதால் உணவு வீணாகப் போய்விட்ட நிலையில் திருமணத்திற்கு வராதவர்களிடம் மணமக்கள் அபராதம் கேட்டு பில் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ பகுதியை சேர்ந்த டக் – டெட்ரா சிம்மன்ஸ் இருவருக்கும் அண்மையில் திருமணம் நடந்திருக்கிறது. ஜமைக்காவில் உள்ள தனியார் விடுதியில் இந்த திருமணம் நடந்திருக்கிறது.

இத்திருமணத்திற்கு குறிப்பிட்ட சிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு விருந்து வைக்க அந்த தனியார் விடுதியில் தனித்தனியாக டேபிள் அட்வான்ஸ் ஆக புக் செய்யப்பட்டிருக்கிறது.
இதில் 2 பேர் மட்டும் அந்த திருமணத்திற்கு கடைசி வரைக்கும் வராமல் இருந்திருக்கின்றனர். அவர்கள் திருமணத்திற்கு வர முடியவில்லை என்ற தகவலையும் கடைசி வரைக்கும் சொல்லாமல் இருந்திருக்கின்றனர்.
இதனால் கடைசி வரைக்கும் அவர்களுக்காக அந்த டேபிள் ஒதுக்கப்பட்டு வீணாக பணம் கட்ட வேண்டிய சூழ்நிலை வந்திருக்கிறது. இந்த சம்பவம் பில் கட்டிய மணமக்களுக்கு விரக்தியாக இருந்திருக்கிறது.
இதனால் உரியவர்களிடம் அந்த பணத்தை பெற்று விட அவர்கள் நினைத்திருக்கின்றனர். தங்கள் திருமணத்திற்கு வருவதாக சொன்னதன் பேரில் தான் டேபிள் புக் செய்யப்பட்டது. வர முடியவில்லை என்ற தகவலையும் கடைசி வரைக்கும் தெரிவிக்கவில்லை.
அதற்கான நஷ்ட ஈடு 240 அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் ரூ.48,107) உடனே அனுப்பி வைக்க வேண்டுமென்று அவர்களுக்கு அதற்கான பில்லினையும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த பில் இணையங்களில் பகிரப்பட்டு அது வைரலாகி வருகிறது.