டயனா கமகே பதவி இழந்தார்
சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டயனா கமகே பதவியை இழந்துள்ளார்.
டயானா நாடாளுமன்றில் உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஓசல ஹேரத் இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
டயனா பிரித்தானிய குடியுரிமை கொண்டவர் என்ற காரணத்தினால் அவர் இலங்கை நாடாளுமன்றில் அரசியல் அமைப்பின் பிரகாரம் பதவி வகிக்க முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிமன்றின் மூன்று நிதிபதிகளும் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.