இன்று நீதிமன்றம் வரவுள்ள தேசபந்து தென்னகோன்
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (21) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று (20) மிரிஹானவில் அமைந்துள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் தேசபந்து தென்னகோனை கைது செய்தனர்.
2022 மே 9, அன்று காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன் பிணை மனுவை சமர்ப்பித்திருந்தார். எனினும், அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.