லொஹானுக்கு அடுத்த ஆப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரான அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலியிலிருந்து திரும்பியவுடன் மேற்கொள்ளப்படும் என கட்சித்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவத்திற்குப் பின்னர் நேற்று மாலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் அங்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்குள்ள அதிகாரிகளிடம் மற்றும் சிறைக்கைதிகளிடம் மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.