கிழக்கு பொதுச்சேவை ஆணைக்குழுவின் பதில் செயலாளராக மன்சூர் கடமையேற்பு
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பதில் செயலாளராக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.மன்சூர் தனது கடமைகளை இன்று (11) பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆளுநர் செந்தில் தொண்டமானால் வழங்கப்பட்ட கடிதத்துக்கமைய, பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க இன்று வழங்கிவைத்த கடிதத்தின் பிரகாரம், தனது கடமைகளை ஏ.மன்சூர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துவண்டா, முதலமைச்சரின் செயலாளர் என்.மதிவண்ணன், பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) எம்.எம்.நஸீர், ஆளணி மற்றும் பயிற்சி பிரதிப் பிரதம செயலாளர் (திருமதி) ஆர்.யூ.ஜலீல், சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.