விலகும் சகாக்கள்; தனித்துவிடப்படும் மஹிந்த!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் சிலர், மஹிந்த ராஜபக்ஷவை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
பெரமுனவின் எம்.பி.க்கள் சிலர் ஜனாதிபதி ரணிலுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ச பிரதமராக இருந்தபோது, நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் அவருடன் சாப்பிடுவதற்கு எம்.பி.க்கள் மிகுந்த ஆர்வம் காட்டிய நிலையில், தற்போது சகாக்கள் அவரை விட்டு விலகிவிடுவதால் மஹிந்த பெரும்பாலும் தனியாகவேதான் சாப்பிடுகின்றாராம்
தனித்துவிடப்படும் மஹிந்த
அதுமட்டுமல்லாது மஹிந்த ரஜபக்ச பிரதமராக இருந்த காலத்தில், நாடாளுமன்றத்துக்கு அவர் வருகை தருகையில் ஏராளமான எம்.பி.க்கள் கூட்டம் நுழைவு வாசல் அருகே அவரை வரவேற்க திரண்டிருக்கும்.
ஆனால் , இன்று அவர் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரியுடன்தான் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைகிறாராம்.
மேலும் அவருக்கு மிக நெருக்கமான இரண்டு அல்லது மூன்று எம்.பி.க்கள் மட்டுமே அவ்வப்போது அவருக்கு நெருக்கமாக இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது