பாதீடு மீண்டும் தோற்கடிப்பு; யாழ் மாநகர சபை பதவி இழக்கிறார் ஆர்னோல்ட்!
யாழ்.மாநகரசபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு மீண்டும் 6 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பதவியிழந்தவராகிறார்.
யாழ் மாநகரசபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று (28) மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டால் இரண்டாவது தடவையாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆதரவாக 16 எதிராக 22
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் பதிவாகின.
அதேவேளை முதல்வர் ஆர்னோல்டினால் , 2023ஆம் ஆண்டிற்கான பாதீடு கடந்த 13ஆம் திகதி முன் மொழியப்பட்ட போது , அது தோற்கடிக்கப்பட்டது.
அதன் பின்னர் அவர் மீண்டும் இரண்டாவது தடவையாக இன்று சமர்ப்பித்த பாதீடும் தேற்கடிக்கப்பட்டமையினால் அவர் பதவி இழந்துள்ளதுடன் மாநகர சபையின் செயற்பாடுகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ்.மாநகர சபையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 9 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.