2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய தீர்மானம்
வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சில அரசுத் துறைகளுக்குக் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக புதிய வாகனங்கள் கிடைக்கவில்லை என்றும், கூறப்படுகின்றது.
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முடிவு
இதன் விளைவாக அதிகாரிகள், குறிப்பாகக் களப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்குக் குறிப்பிடத்தக்கச் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தளவாட சவால்களை முழுமையாக மதிப்பாய்வு செய்த பின்னர், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
அதேவே:ளை இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் பிரதேச செயலகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.