பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்
அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கல்விசாரா ஊழியர்கள்
அதன்படி எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அதன் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.
கல்விசாரா ஊழியர்களின் இன்னல்களை 15 வீதம் குறைத்துள்ளமையினால் குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் முறைப்பாடுகளுக்கு தீர்வு காணுமாறு கோரி தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.