உயிரிழந்தவர் மீண்டும் பொலிஸ் நிலையம் வந்ததால் பரபரப்பு!
களுத்துறையில் ஒரு வாரத்திற்கு முன்னர் உயிரிழந்தவர் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு வந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புலத்சிங்கள பிரதேசத்தில் ஒரு வாரத்திற்கு முன்னர் தனது சகோதரர் இறந்து விட்டதாக மரண நிவாரண சங்கத்திடம் கூறி 26000 ரூபாவை பெண் ஒருவர் மோசடியாக பெற்றுள்ளார்.
பெண்னின் மோசடி அம்பலம்
புளத்சிங்கள மொல்காவ பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவர் கலவான பிரதேசத்தில் வசிக்கும் தனது கணவரின் சகோதரன் இறந்துவிட்டதாக ஏமாற்றி மோசடியாக பணம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளார்.
குறித்த நபர் உயிரிழந்ததாக கூறப்பட்டமையினால் மரண நிவாரண சங்கத்தினர் மரண சடங்குகளை செய்ய தயாராகியுள்ளனர்.
எனினும் மரண நிகழ்வு வேறு ஊரில் நடப்பதாக கூறி தடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த மரண நிவாரண சங்க நிர்வாகிகள் இறந்தவரின் மரண சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கூறியபோது கிடைத்த தொகையில் பாதியை செலுத்தி சங்கத்தில் இருந்து விலகுவதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
உயிருடன் உள்ள ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறியதாக சங்கத்தின் பொருளாளர் புலத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.