சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் ; மேலும் நான்கு மாணவர்கள் கைது
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் பல்கலை மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இந்த நால்வரையும் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவர் தனது வீட்டில் உயிர் மாய்த்துக் கொண்டார்.
புஸ்ஸல்லாவை - இஹலகம பகுதியைச் சேர்ந்த சரித் டில்ஷான் என்ற இளைஞன் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.