களனி பல்கலைக்கழக வேந்தர் மரணம்; ஜனாதிபதி விடுத்த பணிப்புரை
உயிரிழந்த களனி பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி வெலமிடியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை, பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் கொழும்பு மற்றும் சிலாபம் மாவட்ட நீதிமன்றங்களின் சங்கசபைத் தலைவரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவரும், அக்கமஹா பண்டிதர் டொக்டர் அதி. வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரர் இன்று காலமானார்.
இந்நிலையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களைத் தொடர்புகொண்டுள்ள ஜனாதிபதி , தேரரின் இறுதிக் கிரியைக்கான நிகழ்வுகளை, பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தொடர்புடைய செய்தி
களனி பல்கலைக்கழக வேந்தர் காலமானார்