பெண் ஒருவரால் தாக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
மெதிரிகிரிய – பெரகும்புர பிரதேசத்தில் தனிப்பட்ட மோதலொன்றை தடுக்கச் சென்ற 37 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் தனது வாகன பழுதுபார்ப்பு நிலையத்தில் இருந்து வீடு திரும்புகையில் , இருவருக்கு இடையில் ஏற்பட்டிருந்த மோதலைத் தடுப்பதற்காகக் முயற்சித்துள்ளார். இதன்போதே, அவர் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த நபர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
மேலும் உயிரிழந்தவரின் மனைவி, கடந்த 7 நாட்களுக்கு முன்னரே குழந்தையொன்றை பிரசவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில், கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றிரவு குறித்த பெண்ணின் வீட்டுக்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.